பேருந்து விபத்தில் 29 பேர் பலி

பேருந்து விபத்தில் 29 பேர் பலி

1 mins read
88e65596-f99e-4d8e-bdae-31b117601d0d
-

போர்ச்சுகலின் மடிய்ரா தீவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 29 ஜெர்மானிய சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.

அந்தப் பேருந்து சாலையிலிருந்து சுழன்று செங்குத்தான ஓரத்தில் சரிந்து, கீழே இருக்கும் வீடு ஒன்றை இடித்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

விபத்தில் உயிரிழந்தோரில் 17 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள். அத்துடன், 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் ஒரு பெண் மருத்துவமனையில் பின்னர் மாண்டதாகச் செய்தியாளர்கள் அறிந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போர்ச்சுகல், ஜெர்மனி அரசாங்கத் தலைவர்கள் தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர். விசாரணை தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.