பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்; உயர்ந்தது மாண்டோர் எண்ணிக்கை

பிலிப்பீன்ஸின் மத்திய பகுதியை உலுக்கி எடுத்த 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11க்கு உயர்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தில் இடிந்த இரண்டு கட்டடங்களில் சிக்கிப் புதையுண்ட பலரை அதிகாரிகள் தொடர்ந்து மீட்க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

பிலிப்பீன்ஸ் நேரப்படி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மணிலாவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

பம்பாங்சா மாவட்டத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. உயிரிழந்தோர் அனைவரும் அங்கு வசித்தவர்கள் என்று பிலிப்பீன்ஸ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

தொடர்ந்து விழும் கட்டடச் சிதைவுகளால் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!