டுரியான் போன்ற குறிப்பிட்ட சில பருவங்களில் மட்டுமே விளையும் பழங்களை விற்பவர்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும் என்று பினாங்கு மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இப்போது கிடைக்கப்பெறும் உரிமங்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்.
கடையின் அளவு, பணிபுரிபவர்கள், சுகாதார விதிமுறைகள் உள்ளிட்டவை இந்த உரிமத்தின் நிபந்தனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.