கோலாலம்பூர்: கிழக்குக் கரையோர ரயில் திட்டத்தின் (இசிஆர்எல்) புதிய ஒப்பந்தத்தில் சீனாவுக்கு 4,500 ஏக்கர் நிலம் தரப்படுவதாக கசிந்த செய்தி உண்மையில்லை என மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
இசிஆர்எல் திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தில் அதன் செலவினம் 21.5 பில்லியன் ரிங்கிட் (S$7.1 பி.) குறைக்கப்பட்டதில் 4,500 ஏக்கர் நிலம் சீனத் தொடர்பு கட்டுமான நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்கும் திட்டமும் அடங்கும் என வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதீன் குறிப்பிட்டிருந்தார்.
அது பற்றி தமக்குத் தெரியாது என்றும் ஒப்பந்தத்தில் அவ்வாறு இல்லை என்றும் கூறிய திரு லிம், அப்படி ஏதாவது கூடுதல் அம்சம் இருக்குமானால், அது அமைச்சரவையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.