27ஆண்டுகளாக கோமாவில் இருந்து கண்விழித்த பெண்

27ஆண்டுகளாக கோமாவில் இருந்து கண்விழித்த பெண்

1 mins read
ae272828-35f1-4d00-b608-3376b3decb5f
-

ஐக்கிய அரபுச் சிற்றரசில் தன் நான்கு வயது மகனுடன் வீட்டுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் ஒரு பெண். அந்தக் கார் திடீரென பள்ளிப் பேருந்தில் மோதியது.

அப்போது 32 வயதாக இருந்த திருவாட்டி முனிரா அப்துல்லா, மகனைக் காப்பாற்ற எண்ணி அவனை இறுக்கமாக கட்டியணைத்தார். ஆயினும் அவருக்கு அடிபட்டதில் மூளையில் பலமாகக் காயமடைந்து கோமாவில் விழுந்தார். அப்போது அவரால் இனி கண்விழிக்க முடியாது என மருத்துவர்கள் நினைத்தனர்.

அதிசயமாக அவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கண்விழித்தார்.

திருவாட்டி முனிரா ஒரு நாள் விழித்தெழுவார் என்று அசையா நம்பிக்கையுடன் இருந்ததாக அவரின் 32 வயது மகன் ஓமார் வெப்ஏர் தெரிவித்தார். தாயாரின் தியாகத்தால் அப்போது மூன்று வயதாக இருந்த திரு ஓமார் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பினார்.