சீனா கருத்தரங்கில் உல­கத் தலை­வர்கள்

சீனா கருத்தரங்கில் உல­கத் தலை­வர்கள்

1 mins read

பெய்ஜிங்: பல நாடுகள் வழியாக செல்­லும் சீனா­வின் வர்த்தக இணைப்­புப்­ பாதை திட்­டத்தை விளக்­கும் கருத்­ தரங்கு நேற்று பெய்ஜிங்கில் தொடங்கியது. ஒவ்­வ­ொரு நாட்டி­லும் அந்நாட்­டின் உள்கட்டமைப்பு வசதி­களை மேம்­படுத்­துவது வர்த்தக இணைப்­புப்­ பாதை­யின் முக்­கிய நோக்கமா­கும். நிதியுதவியு­டன் ரயில்கள், சாலைகள், துறைமுகங்கள் போன்ற வசதிகள் வர்த்தக இணைப்­புப்­ பாதை செல்­லும் நாடு­க­ளில் ஏற்­படுத்தப்­படும்.

ஆனால் கட­னில் மூழ்­கும் அபாயம் இருப்பதாக சில நாடுகள் கவலை தெரிவித்­துள்­ளன. பெய்ஜிங்கில் நடைபெ­றும் மூன்று நாள் உச்சநிலை மாநாட்­டில் 37 நாடு­களைச்­ சேர்ந்த தலை­வர்கள் பங்கேற்­கின்ற­னர். இவர்­க­ளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்­டின், இத்­தாலி பிரதமர் கியூசெப்­ கோன்டே ஆகியோ­ரும் அடங்கு­வர்.