நியூயார்க்: அமெரிக்காவில் இவ் வாண்டில் இதுவரை 695 தட் டம்மை சம்பவங்கள் பதிவாகியி ருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டில் தட்டம்மைக்குக் காரணமான வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவில் முதல் முறையாக ஆக அதிக அளவில் தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் வாஷிங்டன், நியூயார்க் வட்டாரங் களில் தட்டம்மை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதையடுத்து தொற்றுநோயான தட்டம்மை மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
"தட்டம்மை பரவல் தொடர்ந்து நீடித்தால் அமெரிக்காவில் மீண் டும் அந்நோய் கால் ஊன்றத் தொடங்கிவிடும்," என்று நோய்த் தடுப்பு நிலையங்களுக்கான முகவை வெளியிட்ட அறிக்கை எச்சரித்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும் இனியும் ஏற் படாது என்று அர்த்தமாகாது.
தட்டம்மை உள்ள நாடுகளி லிருந்து பயணம் செய்யும் பயணிகள் வழியாக தட்டம்மை பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த அக்டோபர் மாதத்தி லிருந்து நியூயார்க்கில் மட்டும் ஆக அதிகமாக 390 தட்டம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதில் புருக்ளினில் வசிக்கும் யூத சமூகத்தின் குழந்தைகளிடையே தட்டம்மை நோய் பரவலாகக் காணப்படுகிறது.
அரிசோனா, கலிஃபோர்னியா, கொலராடோ, ஃபுளோரிடா, டெக் சாஸ், ஜார்ஜியா, நியூஜெர்சி உட் பட 22 மாநிலங்களில் இவ்வாண்டு தட்டம்மை சம்பவங்கள் பதிவாகி யுள்ளன.

