இலங்கையில் கல்முனை நகரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தை அதிகாரி ஒருவர் நேற்று சோதனையிட்டார். நேற்று முன்தினம் இதே இடத்தில் தற்கொலையாளிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஆறு சிறுவர் உட்பட 15 பேர் மாண்டனர்.
வெடிகுண்டு வெடித்த இடத்தில் நான்கு மனித வெடிகுண்டுகள் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூவர் காயங்களுடன் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

