பேங்காக்: தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நேற்று பேங்காக்கில் கோலாகல மாக நடந்தது. 69 ஆண்டுகளில் தாய்லாந்தில் நடக்கும் முதல் முடிசூட்டு விழா இது.
இந்த கொண்டாட்டங்கள் தாய்லாந்தில் மூன்று நாட்களுக்கு நீடிக்கவுள்ளது.
2016ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் மஹா வஜிரலோங்கோர்ன் அந்நாட்டின் மன்னர் ஆனார்.
இருப்பினும் மன்னர் வஜிரலோங்கோர்னின் அதிகார பூர்வ முடிசூட்டு விழா இப்போது தான் நடைபெறுகிறது. பேங்காக் கில் உள்ள மாபெரும் அரண்மணை யில் முடிசூட்டு விழா நடைபெற்றது.
பல்வேறு பாரம்பரிய சடங்குகள் நடந்துமுடிந்த பிறகு மன்னரின் தலையில் 7.3 கிலோ எடை கொண்ட கீரிடம் அணிவிக்கப் பட்டது.
மன்னர் வஜிரலோங்கோர்ன் (வயது 66) தான் விரும்பிய பெண் சுதிடாவை புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

