காஸா: இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கு பாலஸ்தீன தலைவர்கள் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருதரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலை ஏற்பட்டால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவியது. கடந்த சனிக்கிழமையன்று காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை பாய்ச்சப்பட்டது. அதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது. நேற்று போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளைப் பற்றி தகவல் வெளியிட இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார்.
போர் நிறுத்தத்துக்கு அடையாளமாக காஸா எல்லைப்பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியது.