தைப்பே: தைவானுக்குள் ஊடுருவி தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள சீனா முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ள தாக தைவான் அதிபர் சாய் இங் வென் நேற்று தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அவர், தைவான் நீரிணையில் எவ்வித அத்துமீறல்கள் நிகழ்ந்தாலும் அவற்றைத் தனது ராணுவம் தடுத்து நிறுத்தும் என்று கூறினார்.
தைவானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமல்படுத்தப்படும் சட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாரம் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். சீனாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.