மூடப்பட்டது விலங்கியல் தோட்டம்; உரிமையாளர் கைது

கனடாவின் மோன்ட்ரியல் நகருக்கு அருகிலுள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அங்கிருந்து 100 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விலங்கியல் தோட்டத்தில் இரண்டு புலிகள் மாண்டு கிடந்ததாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதனை அடுத்து, விலங்கு வதை செய்ததன் பேரில் விலங்கியல் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில் சிங்கங்கள், வரிக்குதிரைகள், கங்காருகள், கரடிகள் உள்ளிட்டவை அடங்கும். அந்த விலங்குகளின் உடல்நிலையை விலங்கு மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

கனடாவில் விலங்கியல் தோட்ட உரிமையாளர் ஒருவர்மீது விலங்கு வதை குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்தக் குற்றத்திற்காக அவருக்கு ஐந்து ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!