அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயார் என்றாலும் அந்நாடு தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக சீனா குறை கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை நிறுத்துவதற்கான வர்த்தக ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் டியேன்காய் தெரிவித்திருக்கிறார்.
"இது குறித்த முடிவை எட்ட எங்கள் அமெரிக்க சகாக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா இன்னமும் தயாராக உள்ளது. எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன," என்று திரு சுய் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மே மாதம் 10ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கையில் சீனா மீதான வர்த்தக வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உயர்த்தியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நிலுவையில் நின்றது.
"இரு தரப்பினரும் முன்பு ஏற்றுக்கொண்ட வரைவு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒரு முறைக்குப் பலமுறை திடீரென மனம் மாறி பின்வாங்கியது. ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவது அமெரிக்காதான் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது," என்றார் திரு சுய்.
‘அமெரிக்கா அடிக்கடி மனம் மாறுகிறது’
22 May 2019 10:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 May 2019 10:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!