பேங்காக்: தாய்லாந்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு மன்னரும் அரசியாரும் நேற்று துவக்கிவைத்தனர்.
நாடாளுமன்றத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய மன்னர் மஹா வஜிராலொங்கோர்ன், கவனத்துடனும் நேர்மையுடனும் செயலாற்றும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
“உங்களது செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும். உங்களது செயல்களைப் பொறுத்து நாட்டு மக்களின் வாழ்க்கை அமையும்,” என்று 66 வயது மன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 250 செனட்டர்களை ஆளும் ராணுவம் அண்மையில் தேர்ந் தெடுத்தது. ராணுவத்தின் தேர் வுக்கு மன்னர் ஒப்பதல் வழங்கினார்.
அடுத்த வாரம் ஏறத்தாழ 500 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரைத் தேர்ந்தெடுக்க செனட்டர்கள் வாக்களிப்பர்.