பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கெடா மாநிலத்தில் அண்மையில் இரண்டு பேர் கைது செய்யப் பட்டனர்.
அவர்கள் இருவரும் வெடி குண்டு தயாரிப்பதில் நிபுணர்கள் என்று தெரியவந்துள்ளது.
தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு களை அவர்கள் சோதனை நடத்தியதாகவும் மலேசிய போலிசார் தெரிவித்தனர்.
இம்மாதம் 14ஆம் தேதியன்று மலேசியப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலோங்கூரிலும் கெடாவிலும் அதிரடிச் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது மலேசியர் களான முகம்மது சியாசானி மாசான், முகம்மது நூருல் அமின் அசிசான் ஆகியோருடன் இன் னொருவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மூன்றாவது ஆடவர் இந்தோனீசியாவைச் சேர்ந்த நூருதீன் அலேலே.
முகம்மது சியாசானியும் முகம்மது நூருல் அமினும் வெடி குண்டு தயாரிப்பதில் பயிற்சி பெற இந்தோனீசியாவின் யோக் யகார்த்தாவுக்குக் கடந்த ஆண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் இந்தோனீசியாவில் இயங்கி வரும் ஜமா அன்ஷாருத் தவ்லா பயங்கரவாத அமைப்பு பயிற்சி வழங்கியது.
முஸ்லிம் அல்லாதோரின் வழி பாட்டுத் தலம் ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த முகம்மது சியாசானி திட்டமிட்டிருந் ததாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீது பாடோர் கூறினார்.
மலேசியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல கைது செய்யப்பட்ட இந்தோனீசியர் திட்ட மிட்டிருந்ததாக அறியப்படுகிறது.
இந்நிலையில், வெடிகுண்டு களைத் தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை அவர்கள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
அவை பதுக்கி வைக்கப் பட்டுள்ள இடத்தை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்தப் பொருட்களைப் பயன் படுத்தி எளிதில் கண்டுபிடிக்க முடியாத டிஏடிபி வெடிகுண்டு களையும் தயாரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டிஏடிபி வெடிகுண்டுகள் 25 மீட்டரிலிருந்து 50 மீட்டர் விட்டம் வரை இருக்கும் அனைத்தையும் அழிக்கக்கூடியவை.