மலேசியாவில் பெரும்பாலான மண முறிவுகளுக்கு நிதிப் பிரச்சினை களே காரணம் என தெரியவந்துள் ளது. மலேசியாவின் தேசிய பதி வகத் துறையிலுள்ள திருமண சம ரசத் தீர்வு மன்றத்தின் புள்ளி விவரங்கள் இதனைத் தெரிவிப் பதாக அந்நாட்டின் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஹனா இயோ கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மன்றத்துக்கு வந்த 6,901 மணமுறிவு வழக்குகளில் 2,971 வழக்குகள் குடும்பத்தில் நில விய நிதிப் பிரச்சினைகள் தொடர் பானவை என்றார் அவர். மணமுறிவு ஏற்படும்போது கணவன் அல்லது மனைவியின் பொறுப்பில் பிள்ளை கள் விடப்படுகிறார்கள்.
அப்போதும் வேலையின்றி, பண மின்றி மனஉளைச்சலுக்கு ஆளாகும் போது அவர்கள் தங்களது சொந்தப் பிள்ளைகளையே துன்புறுத்திய புகார்கள் அரசாங்கத்திற்கு வந்திருப் பதாக அவர் கூறினார்.