பாகாங்: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணத்தால் கேமரன் ஹைலண்ட்ஸ் மலைப் பகுதியில் இரு வேறு இடங்களில் நிலச்சரிவுகள் நேற்று ஏற்பட்டன.
முதல் நிலச்சரிவு காலை ஆறு மணியளவிலும் இரண்டாவது நிலச்சரிவு காலை 9.30 மணியளவிலும் நடந்ததாகக் கூறப்பட்டது. இரு இடங்களிலும் எந்த உயிர்ச் சேதமும் இல்லை என்றும் கூறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம். நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியின் அருகே அமைந்துள்ள பண்ணையில் தண்ணீர்க் குழாய் ஒன்றும் உடைந்ததால் நிலைமை மோசமாகி இருக்கக்கூடும் என்று அப்பகுதியின் போலிசார் தெரிவித்தனர்.