லண்டன்: தெரேசா மேக்குப் பிறகு பிரிட்டனின் பிரதமராக நான், நீ என்று போட்டி போட்டுக்கொண் டிருப்பவர்கள் தங்களின் தலை மைத்துவ பிரசாரங்களை நேற்று தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நிச்சயமற்ற நிலையிலேயே பிரெக்ஸிட் திட்டம் சிக்கியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, அடுத்த மாதம் 7ஆம் தேதியன்று பதவி விலக இருப்பதாக விம்மிக் கொண்டு நேற்று முன்தினம் அறி வித்தார்.
இதையடுத்து ஐரோப்பிய ஒன் றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் திட்டம் தொடர்ந்து சிதைவுற்ற நிலையில் உள்ளது.
பதவி விலகலை உறுதிப்படுத்தி திருவாட்டி மே அறிவித்ததைத் தொடர்ந்து, இன்னும் இரு மாதங் களில் அவரின் பதவியை நிரப்பும் பணி தொடங்கிவிட்டது.
கன்சர்வேடிவ் கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து அடுத்த மாதம் மே பதவி விலகினாலும் கட்சி உறுப்பினர்கள் அடுத்த தலை வரைத் தேர்ந்தெடுக்கும்வரை மே தொடர்ந்து பிரதமராக இருப்பார்.
பிரெக்ஸிட்டுக்கான தேதி தற் போது அக்டோபர் மாதம் 31ஆம் தேதி என்று குறிக்கப்பட்டிருந் தாலும் புதிதாக வரக்கூடிய தலை வர் பிரெக்ஸிட்டைத் தாமதிக் கலாம்.
முன்னாள் வெளியுறவு செய லாளர் போரிஸ் ஜான்சன் இப்பதவியை ஏற்பார் என்ற எதிர் பார்ப்புகள் ஒரு புறம் இருக்க, அவரைத் தொடர்ந்து முன்னாள் பிரெக்ஸிட் செயலாளர் டாமினிக் ராப் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டத்தில் இவ்விருவருக்குமே உடன்பாடில்லை.
இதற்கிடையே யார் போட்டியில் வென்றாலும் உடனே பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யவேண் டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் கூறினார்.
இதுவரையில் ஜான்சனுடன் சுகாதார அமைச்சர் மேட் ஹேன்கொக், தற்போதைய வெளி யுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ட், அனைத்துலக மேம்பாட்டுச் செய லாளர் ரோரி ஸ்டியூவட், முன்னாள் ஓய்வூதிய அமைச்சர் எஸ்தர் மெக்வி ஆகிய ஐவரும் பதவிக் காக போட்டியிடுவதை உறுதிப் படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே எதிர்காலத்திற்கு ஒரு தலைவர் தேவையென்றும் அதிலுள்ள நம்பிக்கையில் தான் பதவிக்காக போட்டியிடவிருப்பதாக வும் திரு ஹேன்கொக் பிபிசி வானொலியிடம் கூறினார்.
இந்தக் குறிப்பிட்ட பதவிக்காக பலரும் போட்டி போட்டுக்கொண்டும் காத்துக்கொண்டும் இருக்கிறார் கள் என்று கூறப்படுகிறது.
கட்சி உறுப்பினர்களின் தேர்வு ஜான்சனாக இருந்தாலும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வேறு முடிவு எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.