வியட்னாமில் எச்1என்1 அச்சம்

வியட்னாமில் எச்1என்1 அச்சம்

1 mins read

ஹனோய்: வியட்னாமில் எச்1என்1 நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 500,000 பன்றிகளைக் கொன்றுள்­ளது. இதுவரையிலும் அங்கு 1.7 மில்லியன் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அந்நாட்டின் மக்கள் தொகை 95 மில்லியன் பேர். அவர்களில் முக்கால்வாசி பேர் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். அங்கு 30,000 பன்றிப் பண்ணைகள் உள்ளன.