கோலாலம்பூர்: கிட்டத்தட்ட 150 மில்லியன் அமெரிக்க டாலர் (S$206 மி.) மதிப்புள்ள செம்பனை எண்ணெய்யை மலேசியாவிடமிருந்து சீனா பெற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாக நேற்று ஊடகங்கள் கூறின.
எண்ணெய்க்குப் பதிலாக சீனா தன் கட்டுமானச் சேவைகள், இயற்கை வளங்களில் விளையும் பொருட்கள், சிவிலியன், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை மலேசியாவுக்குத் தருவதாக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
கையிருப்பில் உள்ள செம்பனை எண்ணெய்யை மலேசியா குறைக்கும் முயற்சியில், தன்னிடமிருந்து அதை வாங்கி வரும் சீனா கூடுதல் எண்ணெய்யை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.