சரவாக்கில் ஐந்து மீட்டர் வரை உயர்ந்த பெருவெள்ளம்

சரவாக்கில் ஐந்து மீட்டர் வரை உயர்ந்த பெருவெள்ளம்

1 mins read
826fef5c-6999-4bba-bf86-32db18414d11
-

கடந்த இரண்டு நாட்களாக சரவாக்கின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் பெருகியுள்ளது. இதனால் வீடுகளும் பொதுச்சொத்தும் சேதமடைந்துள்ளன.

பெலாகா மாவட்டத்தின் லோங் புசாங் பகுதியில் நீர்மட்டம் ஐந்து மீட்டர் வரை உயர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டோருக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை அனுப்ப அந்த மாநிலத்தின் பேரிடர் நிர்வாகக் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறைந்தது 1,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருந்ததாக 'த ஸ்டார்' செய்தித்தாள் குறிப்பிட்டது.