அமராவதி: அமைச்சர் பதவி கிடைக்காததால் தமக்கு எந்தவித வருத்தமும் இல்லை என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் ரோஜா.
இவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடப் போவதாக அவர் தெரிவித்தார். சாதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டதாலேயே தமக்கு பதவி கிடைக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.