மாஸ்கோ: ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளா தாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், அமெரிக்கா வுடனான உறவு மிகவும் மோசமடைந்து கொண்டே செல்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் ரஷ்யா மீது
பல்வேறு பொருளியல் தடை களை விதித்துள்ளது.
ரஷ்யாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகள் மீதும் பொருளியல் தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கிறது. சிரியா, உக்ரேன் விவகாரம், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள் ளிட்ட விவகாரங்கள் முக்கிய பிரச்சினைகளாகவும் இருந்து வருகின்றன. இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துப் பேசியுள்ள விளாடிமிர் புட்டின், “இருதரப்பு உறவு கீழ்நோக்கிச் செல்கிறது, நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.
ஜப்பானில் இம்மாத இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
இதில் டோனல்ட் டிரம்ப், விளாடிமிர் புட்டின் இடையிலான சந்திப்பு நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில் புட்டின் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.