துபாய்: ஓமன் கடல் பகுதியில் சேதமடைந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்களில் இருந்த 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கப்பல் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் இது ஈரானின் தாக்குதல் என்று கூறினாலும் ஈரான் அதை மறுத்துள்ளது. அதே சமயம் வேறு காரணங்களால் கப்பல்கள் சேதமடைந் திருக்கலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
இதே கடற்பகுதியில் கடந்த மாதம் நான்கு எண்ணெய்க் கப்பல்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.