காபூல்: ஆப்கானிஸ்தானில் சாபுல் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 54 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
தலிபான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பு, தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய அவசர மருத்துவ வாகனத்தை வெடிக்கச் செய்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

