இந்த வாரம் சீனாவின் தெற்கு, மத்திய பகுதிகளைத் தாக்கிய கனமழையாலும் வெள்ளத்தாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இயற்கையின் சீற்றத்தால் இதுவரை 61 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் 356,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் சீன மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் அவசரகால நிர்வாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் 9,300 வீடுகள் இடிந்ததாகவும் 3.71 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலம் சேதமடைந்ததாகவும் குறிப்பிட்டது.
வெள்ளத்திலிருந்து 4,300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.