ஹாங்காங்: ஹாங்காங் அரசாங்கத் தால் கொண்டுவரப்படவிருந்த நாடு கடத்தும் சட்டத்திற்கு எதி ராக நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து அச்சட்டத்தைக் கைவி டும்படி ஹாங்காங் தலைவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங் கில் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்த போராட்டம் மூன்று நாட்களுக்கு முன் மோச மான வன்முறையாக மாறியது.
பெய்ஜிங் ஆதரவுத் தலைவர் கேரி லிம் இதுவரை போராட்டக் காரர்களிடம் பேசவில்லை.
இதற்கிடையே, ஹாங்காங் விஷயத்தில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.
மேலும் ஹாங்காங்கில் ஜனநாய கமும் மனித உரிமையும் மறுஉறுதிப் படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பொதுமக்களின் கோபத்தை அடுத்தும் உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், லிம்மின் சொந்த அரசியல் வட்டாரத்தில் இருந்தே இச்சட்டத்தைக் கைவிடும்படி கூறப்பட்டுள்ளது.
மற்றோர் பெய்ஜிங் ஆதரவு அரசியலாளரான மைக்கேல் டின் இம்மசோதாவைத் தள்ளி வைக்கு மாறு கூறியுள்ளார்.
நாளை மீண்டும் போராட்டம் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், போராட்ட பகுதியில் இருக்கும் வங்கிகள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.