குற்றச்சாட்டுகளை மறுத்த கிறைஸ்ட்சர்ச் குற்றவாளி 

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் கொலை தாக்குதல் தொடர்பாக தன் மீதான 92 குற்றச்சாட்டு களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கைது செய்யப்பட்ட பிரெண்டன் டாரண்ட் நீதிமன்றத்தில் மறுத் திருக்கிறார்.

நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி, லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத் திருந்த துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டுக் கொன் றனர். இதில் 51 பேர் பலியாகி னர். பலர் பலத்த காயமடைந் தனர்.

உலகையே அதிர வைத்த இந்தச் சம்பவத்தில், ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் என்பவர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது 92 குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட் டன. இது தொடர்பான விசா ரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் பிரெண்டன் டாரண்ட் முன்னிலைப்படுத்தப் பட்டார்.

அப்போது தன் மீது சுமத்தப் பட்ட 51 கொலைக் குற்றத்தையும் கொலை முயற்சி குற்றத்தையும் பிரெண்டன் டாரண்ட் மறுத்திருக் கிறார். மேலும் அவர் நீதிமன்றத்தில் சிரித்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெண்டனுக்கு மனநலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!