ஓரினப் புணர்ச்சி காணொளி தொடர்பில் மலேசிய அமைச்சர் அஸ்மின் வாக்குமூலம்

மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, அவர் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் ஓரினப் புணர்ச்சி காணொளி குறித்து போலிசாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக அவரது வழக்கறிஞர் என்.சுரேந்திரன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அமைச்சர் அஸ்மினின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக போலிசார் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டனர்.

திரு அஸ்மின் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, திங்கட்கிழமை வாக்குமூலம் அளித்ததாகத் திரு சுரேந்திரன் தெரிவித்தார்.

“தீய நோக்கம்கொண்ட பொய்யான தாக்குதலுடன் அமைச்சரின் நன்மதிப்பைக் குலைத்து, அவரை வீழ்த்துவதற்காகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என்பதற்கான அறிகுறிகள் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றன,” என்றார் திரு சுரேந்திரன்.

“இக்காரியத்தைச் செய்தவர்களிடம் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களும், நூதனமான உத்திகளும், தெளிவான அரசியல் நோக்கமும் உள்ளன,” என்றார் அவர்.

திரு அன்வர் இப்ராஹிமின் கியடிலான் ரக்யாட் கட்சியின் துணைத் தலைவரான திரு அஸ்மின், சக கட்சி உறுப்பினருடன் ஓரினப் புணர்ச்சி காணொளியில் இடம்பெற்றிருந்ததாகச் சென்ற வாரம் தகவல் வெளியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!