தனது நாட்டை வேவு பார்க்க அனுப்பப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தியை அழித்திருப்பதாக ஈரானிய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள குஹ்மொபொராக் மாவட்டத்திற்குள் அந்த வானூர்தி புகுந்தபோது அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரசு இணைய ஊடகத்தளம் குறிப்பிட்டது.
சுடப்பட்ட வானூர்தி, அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்தது என்று அமெரிக்க அதிகாரி கூறுகின்றனர். இந்த வானூர்தி ‘எம்சிகியூ-4சி டிரிட்டன்’ ரகத்தைச் சேர்ந்தது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாடு குறித்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 2015ஆம் ஆண்டு ரத்து செய்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை வெகுவாக அதிகரித்துள்ளது.