பாசிர் கூடாங்கில் வீசும் நச்சுக்காற்று

ஜோகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங்கிலுள்ள தாமான் மவார் வட்டாரத்தில் அனைத்து பாலர் பள்ளிகளையும் உயர்நிலைக் கல்வி நிலையங்களையும் வரும் வியாழக்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிகமான மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது இதற்குக் காரணம் என்று ஜோகூரின் மாநில அரசாங்கம் கூறியுள்ளது.

தாமான் நுஸா டாமாய் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆக அண்மையில் பாதிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தப் பள்ளியில் நேற்று குறைந்தது ஆறு மருத்துவ உதவி வாகனங்கள் காணப்பட்டதாக பெர்னாமா கூறியது.

திடீரென ஏற்பட்ட இந்தக் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கான காரணத்தை உறுதியாக அடையாளங்காண இயலவில்லை என்று ஜோகூர் மாநில அரசாங்கம் தெரிவித்தது. சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது.

நச்சுப் புகையைச் சுவாசித்ததற்காகத் தற்போது 77 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்தது.

மார்ச் மாதத்தில் ரசாயனக் கழிவுப்பொருட்கள் சுங்கை கிம் காம் ஆற்றில் சட்டவிரோதமாக வீசப்பட்டன. இதனால் 4,000 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!