கம்போடியாவில் இடிந்து விழுந்த கட்டடம்: இருவர் உயிருடன் மீட்பு

சிகானோக்வில்: கம்போடியாவின் கடற் கரை உல்லாசத்தளத்தில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரை குறைந்தது 28 பேர் இறந்துவிட்டதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மேலும் மூன்று சடலங்கள் நேற்று வெளியே எடுக்கப்பட்டன.

கட்டுமானப் பணிகள் நிறைவுபெறாத அந்தக் கட்டடம் கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்தது.

அப்போது அந்த ஏழு மாடி கட்டடத்தில் கட்டுமான ஊழியர்கள் பலர் தூங்கிக்கொண்டிருந்தனர்.

இடிந்து விழுந்த கட்டடம் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது.

சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரை இனி உயிருடன் மீட்பது சிரமம் என்றிருந்த போது நேற்று இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கம்போடியாவின் பிரதமர் ஹுன் சென் சம்பவ இடத்துக்கு நேற்று காலை சென்றார்.

அந்த இருவர் உயிருடன் மீட்கப்படுவதை அவர் நேரில் பார்த்தார். மீட்கப்பட்ட இருவரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நிகழ்ந்த கடற்கரை உல்லாசத்தளத்தில் உள்ள அனைத்து உயர் கட்டடங்களின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதனையிடும்படி திரு ஹுன் சென் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

இதற்கிடையே, சம்பவம் நிகழ்ந்த மாநிலத்தின் ஆளுநர் நேற்று பதவி விலகினார். கம்போடிய நில உரிமையாளர் ஒருவரையும் சீன நாட்டவர்கள் மூவரையும் கம்போடிய போலிசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!