இந்தோனீசியக் கடற்பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பண்டா கடலுக்கு அடியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.3 என பதிவான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11.53 மணிக்கு அம்போன் தீவுக்குத் தெற்கில் 208 கிலோ மீட்டர் தூரத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் நிகழ்ந்ததால் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது.

நிலநடுக்கம் காரணமாக காயமடைந்தோர் பற்றியோ சேதம் பற்றியோ தகவல் வெளியாகவில்லை.

இந்தோனீசியக் கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!