மாசாய்: தாய்லாந்தில் 12 சிறுவர்கள் குகைக்குள் சிக்கிய நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைந்துஉள்ள நிலையில், மீட்புப் பணியின்போது உயிரிழந்த முக்குளிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் எனும் குகை பகுதிக்கு கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட சிறுவர் காற்பந்துக் குழு வீரர்கள் 12 பேரும் பயிற்சியாளர்களும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
ஆழமான அந்தக் குகையிலிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கித் தவித்த நிலையில், ஏராளமான மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 17 நாட்களாகத் தொடர்ந்த பணிகளின் முடிவில், குகைக்குள் சிக்கியவர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், மீட்புப் பணியில் ஈடுபட்ட சமான் குனன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இவ்விபத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்வு தாய்லாந்தில் நடைபெற்றது. குகையில்இருந்து மீட்கப்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில், மீட்புப் பணியில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.