வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்

ஃபுளோரிடா: அனைத்துலக விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

கஸக்ஸ்தான் நாட்டின் ஷெளஸ்கஸ்கான் பகுதியில் விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவைச் சேர்ந்த ஆன் மெக்ளேன், ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மசை சேர்ந்த கமாண்டர் ஓலெக் கோனொனென்கோ, கனடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டேவிட் செயிண்ட் ஜாக்ஸ் ஆகிய அந்த மூவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

இந்தக் குழுவினர் அனைத்துலக விண்வெளி மையத்தில் 204 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் அவர்கள் 3,264 முறை பூமியை வலம் வந்து, சுமார் 8.6 மில்லியன் மைல் தூரத்துக்குப் பயணித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!