எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் லத்தீஃபா கோயா, 46, நேற்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.

இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஈராண்டு காலத்திற்கு 14வது எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்த கடிதத்தை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அவரிடம் வழங்கினார்.

2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டப் பிரிவு 5(7) கீழ் ஒவ்வொரு தலைமை ஆணையரும் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும்.

முன்னதாக, எம்ஏசிசியின் முன்னாள் தலைவர் முகம்மது சுக்ரி அப்துல் தமது சேவையை முன்கூட்டியே முடித்துக்கொள்வதாக அறிவித்ததன் பேரில் லத்தீஃபா கோயாவை புதிய தலைவராக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அண்மையில் நியமித்திருந்தார். திரு சுக்ரியின் பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிய இருந்தது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளநிலை பட்டக் கல்வியை முடித்தவர் லத்தீஃபா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!