சிற்றுயிருக்கு விரித்த வலையில் பெரிய உருவம்

கூச்சிங்: இறால் மீன்களைப் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் பெரிய முதலை ஒன்று சிக்கியது. மலேசியாவின் சரவா மாநிலத்தில் உள்ள சுங்கை பாகோ ஆற்றில் சிக்கிய அந்த பெண் முதலை சுமார் 3.6 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 200 கிலோ எடையும் கொண்டது. 45 நிமிட கடும் முயற்சிக்குப் பிறகு அந்த முதலையைக் கட்டி மீட்டு வந்ததாக சரவா வனவியல் கழகத்தைச் சேர்ந்த வான் மஸ்லான் வான் மஜியான் கூறினார். தமது குழுவினர் அந்த முதலையை கம்போங் பாகோ படகுத்துறைக்குக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பாரந்தூக்கி மூலம் லாரி ஒன்றில் ஏற்றப்பட்ட முதலை மாத்தான் வனவிலங்கு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. கம்போங் பாகோ கிராம மக்களிடமிருந்து நேற்றுக் காலை 6.10 மணியளவில் முதலை பற்றிய தகவலைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறினார் முதலை பிடிப்பதில் 28 ஆண்டு அனுபவம் வாய்ந்த திரு வான் மஸ்லான். சுங்கை பாகோவில் இவ்வாண்டு பிடிபட்டிருக்கம் ஐந்தாவது முதலை இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!