ஜோகூர் சுங்கச் சாவடியில் நெரிசலைக் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை

மலேசியாவின் சோதனைச் சாவடியில் கூட்ட நெரிசலைக் குறைக்க குறுகியகாலத் தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜோகூர் பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு, சுல்தான் இஸ்கந்தார் சுங்கச்சாவடி ஆகியவற்றில் இவை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வுகள், மலேசிய அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டன. மலேசியத் துணைப்பிரதமர் டாக்டர் வான் அஸிஸா அந்தக் கூட்டத்தை வழிநடத்தியதாக பெர்னாமா கூறியது.

குறுகியகால நடவடிக்கையாக, மலேசிய தானியக்க நுழைவு அனுமதி முறை மறுபடியும் செயல்படுத்தப்படும் என்றும் அதற்கான ஏலக் குத்தகைக்கு அரசாங்கம் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் என்றும் டாக்டர் வான் அஸிஸா கூறினார். சுற்றியுள்ள சாலைத் தடங்களில் வாகனங்கள் எதிர்த்திசையில் செல்வதற்கான ‘காண்ட்ரா’ தடங்களை அமைப்பது உள்ளிட்ட வேறு சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலத்தில், மலேசியாவைவிட்டு வெளியேறும் மோட்டார் சைக்கிள்களுக்கான ‘எம்பைக்’ முகப்புகளை அதிகரிக்க அந்தக் கூட்டம் முடிவு செய்தது. மோட்டார் சைக்கிள்களை ஒருமுறை மட்டும் சோதனை செய்யும் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த சிங்கப்பூருடன் இணக்கம் நாடப்படும் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!