1எம்டிபி பண மோசடி விவகாரம்: ரோஸ்மாவின் மகன் கைது

1எம்டிபி பண மோசடி விவகாரம்: ரோஸ்மாவின் மகன் கைது

1 mins read

புத்ராஜெயா: மலேசியா­வின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணை­வியார் ரோஸ்மா மன்சூ­ரின் முதல் திருமணத்தில் பிறந்த புதல்வரும் ஹாலி­வுட் திரைப்படத் தயா­ரிப்பாளருமான ரிஸா அஸிஸ் (படம்), மலேசிய ஊழல் தடுப்பு ஆணை யத்தின் (எம்ஏசிசி) தலை மை­யகத்தில் நேற்று பிற்பகல் கைது செய்­யப்­பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'குட் ஸ்டார் லிமிடெட்' என்ற நிறு­வனத்திடமிருந்து நிதி மோசடி மூலம் கிடைத்த பணத்தைப் பெற்றுக்கொண்ட­தாக 'ரெட் கிரனைட் பிக்சர்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ரிஸா மீது குற்றச்­சாட்டுகள் இருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

மலேசிய அரசாங்­கத்தால் தேடப்­­படும் நிலை யில் தலை­மறைவாக இருந்து வரும் ஜோ லோ­­ வுக்கு 'குட் ஸ்டார்' நிறு­வனம் சொந்த­மானது எனத் தெரிகிறது.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ரிஸா மீது குற்றஞ்சாட்டப்­படும் என எதிர்பார்க்கப்­ படுகிறது. பிரசித்திபெற்ற ஆஸ்கர் விருதுக்கு முன்­­ மொழியப்­பட்ட 'தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்திரீட்' எனும் ஹாலிவுட் திரைப்­படத்தை ரெட் கிரனைட் நிறு­வனம்தான் தயாரித்தது. 1எம்டிபியில் இருந்து மோசடி செய்­யப்­பட்ட பணத்தை இந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற­தாக அமெ­ரிக்க நீதித்துறை ஏற்கெ­னவே கூறி இருந்தது.