எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு: பதிலடி கொடுக்கப் போவதாக ஈரான் மிரட்டல்

எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு: பதிலடி கொடுக்கப் போவதாக ஈரான் மிரட்டல்

1 mins read

ஜெனிவா: ஐரோப்பிய ஒன்றி­யத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான 'சூப்பர்டேங்கர் கிரேஸ்' கிப்ரால்­டர் கடற்பகுதியில் வைத்து சிறை­பிடிக்கப்பட்டதாக பிரிட்டன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்­பட்டுள்ளது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்பட­வில்லை என்று பதில் கூறியுள்ள ஈரான், அனைத்துலக கடற்­பகுதியில் கப்பல் சிறைபிடிக்கப்­பட்டிருப்பதைக் கண்டித்துள்ளது.

கப்பலை விடுவிக்குமாறு பிரிட்டனுக்கு ஈரான் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கப்பல் சிறைபிடிக்கப்­­ பட்ட விவகாரத்தில் சரியான பதிலடி கொடுக்காமல் விடப்­போ­ வது கிடையாது என உள்ளூர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உரை­யில் ஈரா­னிய தற்காப்பு அமைச்சர் அமிர் ஹதாமி எச்சரிக்கை விடுத்தார்.

"பிரிட்டனின் இந்த நடவ­­ டிக்கை அனைத்துலக விதிமுறை­ களை மீறும் செயலாகும்; ஒரு வகையான கொள்ளையாகும்," என அவர் சாடினார்.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடை­களை விதித்துவரும் நிலை­யில் பிரிட்டனின் சிறைபிடிப்பு நடவ­டிக்கை ஈரானுக்கு மற்றொரு நெருக்கடியாக அமைந்துள்ளது.