சோமாலிய ஹோட்டல் மீது போராளிகள் தாக்கியதில்  26 பேர்  மரணம்

மொகாடிஷு: சோமாலியாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் மீது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இறந்தவர்களில் 9 பேர் வெளிநாட்டினர். கென்ய நாட்டவர் மூவர், கனடா நாட்டவர் ஒருவர், பிரிட்டிஷ்காரர் ஒருவர், ஓர் அமெரிக்கர் ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவர். தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. சோமாலியாவின் தெற்கு பகுதியில் கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல மெடினா ஹோட்டலுக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஓட்டிவந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த போராளி அந்த வாகனத்தை வெடிக்கச் செய்ததில் பலர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார். பின்னர் பாதுகாப்புப் படையினர் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட பல போராளிகளில் சிலரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

சோமாலிய அரசாங்கத்தை கவிழ்க்க அல்-ஷபாப் இயக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!