டாக்கா : பங்ளாதேஷின் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத் (வயது 89) உடல் நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவர் டாக்கா மருத்துவமனையில் பல வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவர் 1990ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். எர்ஷாத் ஆட்சிக் காலத்தின்போதுதான் பங்ளாதேஷின் தேசிய சமயமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெற்றார். வழக்குகளில் இருந்து விடுதலையான பிறகு அவர் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை பதவி வகித்தார்.