மிரி: சரவாக்கில், முலு தேசிய பூங்காவில் உள்ள குகையை சுற்றிப்பார்க்கச் சென்ற இருவர் குகைக்குள் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அந்த இருவரில் ஒருவரான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி பீட்டர் ஹான்ஸ் ஹோவர்காம்ப் வெள்ளத்தில் மூழ்கி இறந்ததாக போலிசார் கூறினர்.
மற்றொருவரான உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி 20 வயது ரொவில்சால் ராபின் என்பவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். அந்த குகைக்கு அடியில் செல்லும் ஆற்றுக்குள் மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவைச் சேர்ந்தவர்களும் போலிசாரும் உள்ளூர் கிராம மக்களும் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் போலிசார் கூறினர்.