சரவாக்கில் சுற்றுலா வழிகாட்டியை  தேடும் மீட்புக் குழுவினர் 

மிரி: சரவாக்கில், முலு தேசிய பூங்காவில் உள்ள குகையை சுற்றிப்பார்க்கச் சென்ற இருவர் குகைக்குள் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அந்த இருவரில் ஒருவரான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி பீட்டர் ஹான்ஸ் ஹோவர்காம்ப் வெள்ளத்தில் மூழ்கி இறந்ததாக போலிசார் கூறினர்.

மற்றொருவரான உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி 20 வயது ரொவில்சால் ராபின் என்பவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். அந்த குகைக்கு அடியில் செல்லும் ஆற்றுக்குள் மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவைச் சேர்ந்தவர்களும் போலிசாரும் உள்ளூர் கிராம மக்களும் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் போலிசார் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!