வாஷிங்டன்: துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் அதிநவீன S-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கு துருக்கி அரசு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31-ம் தேதிவரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது விதிக்கப்படும் பொருளியல் தடை துருக்கி்க்கும் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.