விசாரணை கோரும் ஐஸ்லாந்துடனான உறவை முறிக்க பிலிப்பீன்ஸ் எண்ணம்

விசாரணை கோரும் ஐஸ்லாந்துடனான உறவை முறிக்க பிலிப்பீன்ஸ் எண்ணம்

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்பாக கொல்லப்பட்டவர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையிடம் ஐஸ்லாந்து கோரியிருப்பதையடுத்து அந்த நாட்டுடனான உறவுகளை முறித்துக்கொள்வது குறித்து பிலிப்பீன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார். அந்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றம் ஆதரித்ததை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு போதைப்

பொருள் தொடர்பான குற்றங்களின் மீது கடும் நடவடிக்கையை அதிபர் டுட்டர்ட்டே தொடங்கினார். அதன் தொடர்பில் 5,300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டாலும் உண்மையான எண்ணிக்கை இதைவிட நான்கு மடங்கு என மனித உரிமைக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.