கிளந்தானைச் சேர்ந்த முன்னாள் மலேசிய மாமன்னர் சுல்தான் ஐந்தாம் முகம்மது, தமது மனைவியான ரஷ்ய பேரழகி ஒக்சனா வொஎவொடினாவை விவாகரத்து செய்திருப்பதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 1ஆம் தேதியன்று அவர்களது விவாகரத்து பதிவு செய்யப்பட்டதாக ‘த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ இன்று தெரிவித்தது.
முத்தலாக் முறையில் செய்யப்பட்ட அந்த விவாகரத்து சிங்கப்பூரில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களது மகன் பிறந்து இரண்டு மாதங்களில் இவ்வாறு நேர்ந்துள்ளது.