பெட்டாலிங் ஜெயா: அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்த ஆடவர் உயிரிழந்துள்ளார்.
மெடான் கஹாயா அடுக்குமாடிக் கட்டடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றி போலிசாருக்குப் புதன்கிழமை (ஜூலை 17) பிற்பகல் 1.50 மணிக்குத் தகவல் கிடைத்தது.
உயிரிழந்த அந்த 32 வயது ஆடவரின் பெயர் ஸ்ரீ குமரன் மலோவகம் (Eng: Malovagam) என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காருக்குள் சிக்கிய அந்த ஆடவரின் சடலத்தைக் துணைக்கருவிகளைக் கொண்டு எடுக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.