ஸாம்பியாவுக்குச் சென்றிருந்த இளையர் குழு, குட்டிச்சுவரைக் கொண்ட ஓர் அடைப்புக்குள் படுத்திருந்த யானையைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஓர் இளம்பெண் யானைக்கு முன் தனது கைப்பேசியை நீட்டிப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது அதுவரையில் சாந்தமாக இருந்த யானை திடீரெனக் கோபப்பட்டு அந்தப் பெண்ணின் முகத்தைத் தனது தும்பிக்கையால் அறைந்தது.
வலியால் அவதிப்பட்ட அந்தப் பெண் கைப்பேசியைக் கீழே போட்டுவிட்டுப் பின்வாங்கினார். புல் தரையில் விழுந்த அந்தக் கைபேசியை யானை தனது தும்பிக்கையால் பொறுக்கி எடுக்க முயல்வது போல காணொளியில் தென்படுகிறது.
எரின் லே என்பவரின் டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்தக் காணொளி 10.9 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.