சிட்னி: மூன்று மகள்கள் உட்பட அக்குழந்தைகளின் தாயார் மற்றும் பாட்டியைக் கொலை செய்த ஆஸ்திரேலிய தந்தை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று குழந்தைகளும் இரண்டு வயதுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் பெர்த் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஐந்து பேரும் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர். அந்தக் கொலைகளைச் செய்ததை ஆஸ்திரேலியரான 25 வயது ராபர்ட் ஹார்வே ஒப்புக்கொண்டதாக போலிசார் கூறினர். ஹார்வே செய்த குற்றச்செயல்கள் கொடூரமானவை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் ஹால், அந்த ஆஸ்திரேலிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேற்கு ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.