பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று பதவி ஏற்கிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெரமி ஹண்ட் 46,656 வாக்குகள் பெற்ற நிலையில், போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவையில் பணியாற்றியது தனக்குப் பெருமை என்ற போரிஸ் ஜான்சன், இந்த வெற்றி தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். ஒப்பந்தம் உள்ளதோ இல்லையோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை வழி நடத்த உறுதி அளித்திருந்தார் திரு போரிஸ்.
திரு போரிஸின் வெற்றி, பிரிட்டிஷ் சட்டசபையினருடன் மோதலை ஏற்படுத்த உள்ளது. ஒப்பந்தமின்றி பிரெக்ஸிட் திட்டம் நிறைவேறாது என்று கங்கணம் கட்டியுள்ள சட்டசபை உறுப்பினர்கள், இதை எந்த அரசாங்கம் எதிர்த்தாலும் அதைக் கவிழ்த்துவிடும் என்ற உறுதியில் உள்ளனர்.
லட்சிய நோக்கு, திறமையான பேச்சு, கொள்கையில் உன்னிப்பான அறிவு போன்ற ஆற்றலுக்குப் பெயர் போனவர் திரு ஜான்சன்.
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தைச் செய்ய திரு ஜான்சன் தீவிரமாக உள்ளார்.
எலிஸபெத் ராணியை பக்கிங்ஹாம் மாளிகையில் சந்தித்த பின்னர் திருமதி மே இன்று அலுவலகத்திலிருந்து கிளம்புவார். அதைத் தொடர்ந்து ராணி அதிகாரபூர்வமாக திரு ஜான்சனை பிரதமராக நியமிப்பார்.